ஸ்ரீ பெட்டாலிங்கில் BMW கார் தீயில் அழிந்தது

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 27-

கோலாலம்பூர்,ஸ்ரீ பெட்டாலிங், கேசாஸ் நெடுஞ்சாலையில் LRT நிலையத்திற்கு அருகில் ஆடம்பர கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் அந்த சொகுசு கார் முற்றாக அழிந்தது.

இத்தீச்சம்பவம் தொடர்பில் இன்று மதியம் 12.17 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக கோலாலம்பூர் செயலாக்க நடவடிக்கை மையம் தெரிவித்தது.

இதில் BMW i8 ( ஐ 8 ) ரக கார் முற்றாக அழிந்தது. தீயை கட்டுப்படுத்துவதற்கு புக்கிட் ஜலீல் நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் விரைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 12 நிமிடத்தில் தீ முற்றாக அணைக்கப்ட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS