பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 27-
செனட்டரான மேலவை உறுப்பினர் ஒருவர் தனது மெய்க்காவலரை பன்றி இறைச்சியை உண்ணும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பில் போலீசார், விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த செனட்டரின் மெய்க்காவலர் போலீஸ் புகார் செய்த வேளையில் அதனை வன்மையாக மறுத்து அந்த செனட்டரும் பதிலுக்கு ஒரு போலீஸ் புகாரை செய்துள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
அந்த செனட்டர் நேற்று இரவு 8.30 மணியளவில் இது தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலான புகார் ஒன்றை அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தம்முடைய தன்னிலை விளக்கத்தில் அந்த குற்றச்சாட்டை அந்த செனட்டர் மறுத்துள்ளார்.
இதன் தொடர்பில் அந்த செனட்டரை விசாரணை செய்வதற்கு ஏதுவாக துணை பப்ளிக் பிராசிகியூட்டரின் உத்தரவை போலீசார் பெறும் வேளையில் இந்த சம்பவம் குற்றவியல சட்டம் 500 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படும் என்றார்..