கிள்ளான்,செப்டம்பர் 27-
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது இளைஞனைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்கு சமூக ஊடக பிரபலமான சமயப் போதகர் பியு அஸ்மான் என்ற அஸ்மான் சியா அலியாஸ் – க்கு கிள்ளான் செக்ஷன்ஸ் நீதிமன்றம் இன்று 24 ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு பிரம்படித் தண்டனை விதித்தது.
அதேவேளையில் இத்தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வரை தண்டனையின் அமலாக்கத்தை ஒத்திவைக்குமாறு அவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
அந்த நபரை காஜாங் சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
43 வயதுடைய அந்த சமயப் போதகர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் தேதி கிள்ளான், கம்போங் சுங்கை உடாங்- கில் உள்ள கிராம தங்கும் விடுதியில் இக்குற்றத்தை புரிந்தததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.