அலோர் ஸ்டார்,செப்டம்பர் 27-
தாம் தெரிவித்துக்கொண்ட பகிரங்க மன்னிப்பை பெருமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ள மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா -விற்கு கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனூசி முகமட் நோர், இன்று தமது நன்றியை பதிவு செய்தார்.
அதேவேளையில் சிலாங்கூர் சுல்தானின் அறிவுறுத்தலை ஏற்று, இனி தாம் வெளியிடக்கூடிய எந்தவொரு கருத்தாக இருந்தாலும் மிக கவனமாக வாயடக்கத்தை கையாளப் போவதாக சனூசி உறுதி அளித்துள்ளார்.
சிலாங்கூர் சுல்தான் ,தம்மை பெருமனத்துடன் மன்னித்து இருப்பது, அவரின் இரக்க குணத்தையும், கருணையையும் காட்டுகிறது.
சுல்தானின் பரந்த மனப்பான்மை, சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கிறது என்பதுடன் சுல்தான் தலைமையிலான மாநில அரசின் இறையாண்மையை காக்கிறது என்று சனூசி வர்ணித்துள்ளார்.