புத்ராஜெயா,செப்டம்பர் 27-
கடந்த புதன்கிழமை பகாங், குவந்தான், GEBENG தொழிற்பேட்டைப்பகுதியில் உள்ள பழைய இரும்புப்பொருட்கள் மறுசுழற்சி தொழிற்சாலையில் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 91 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகாங் மாநில குடிநுழைவுத்துறை, புத்ரா ஜெயா AMLA ( அம்லா ) தடுப்புப்பிரிவினர் உட்பட பலதரப்பட்ட அரசாங்க ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் முறையான பயண ஆவணம் இல்லாத அந்நிய நாட்டவர்கள் பிடிபட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்துள்ளார்.