கோலாலம்பூர், செப்டம்பர் 27-
குறிப்பிட்ட நபர் ஒருவர், நிறுவனம் ஒன்றில் கொள்முதல் செய்த பங்குகள் தொடர்பாக மேல்மட்டத்தில் உள்ள குறிப்பிட்ட தரப்பினர் பிறப்பித்த உத்தரவு காரணமாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இன்று மறுத்துள்ளது.
உள்ளூர் மற்றும் அனைத்துலக செய்தி தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் விளக்கம் அளித்த SPRM, போதுமான ஆதாரங்கள் மற்றும் தரவுகள் இல்லாமல் விசாரணை அறிக்கையை திறக்க இயலாது என்று தெளிவுப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு விசாரணைக்கும் சட்ட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப சீரான நெறிமுறைகள் இருப்பதால் அந்த நெறிமுறைகளை நிறைவு செய்யும் வரை விசாரணை அறிக்கையை திறக்க இயலாது என்று SPRM விளக்கம் அளித்துள்ளது.