புத்ராஜெயா,செப்டம்பர் 27-
விஷக்கிருமி கலந்த உணவை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மலாக்கா, மாரா அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 48 மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கிற்கு ஆளாகினர்.
அவர்களில் ஆறு மாணவர்கள் மருத்துவமனையின் அவசரப்பபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று MARA தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதார அமைச்சு, கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.