கூலாய், செப்டம்பர் 29-
ஜோடர், கூலாய் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் மூன்று நபர்களை போலிசார் கைது செய்தனர்.
உள்ளூரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க அந்த மூவரையும் கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு போலீசார், நேற்று சனிக்கிழமை இரு வெவ்வேறு இடங்களில் கைது செய்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தன் செங் ஹீ தெரிவித்தார்.
இந்த முன்று நபர்களை கைது செய்தது மூலம் 13 கைப்பேசிகள், விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள் ஒரு மோதிரம் உட்பட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.