அமெரிக்கா தூதரகத்தின் பின்னால் ஆதரவு பேரணியா?

கோலாலம்பூர், செப்டம்பர் 30-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக், ஜாலான் தமன் யூ-தண்ட் சாலையில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டடத்தின் பின்னால் ஓர் ஆதரவு பேரணி இன்று நடைபெற்று இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

காலை 8.10 மணிக்கு நடைபெற்ற இந்த பேரணி, நாட்டின் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடத்தப்படவில்லை என்று வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி முகமது லாசிம் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேல் நடவடிக்கையை கண்டித்தும் இந்த பேரணி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏழு பேர பங்கேற்றுள்ளனர். புலன் விசாரணைக்கு ஏதுவாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS