கோலாலம்பூர், அக்டோபர் 18-
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், போலிடெக்னிக், சமூக கல்லூரிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு BAS.MY இலவச பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களுக்கு பேருந்து சேவை இலவசமாகும்.
அதேவேளையில் 50 வெள்ளி மட்டுமே மாதாந்திரக் கட்டணத்தை கொண்ட My50 எனும் பொது போக்குவரத்து சேவைக்கான அட்டையை, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயன்படுத்திக்கொள்வதற்கான திட்டம் தொடரப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
