கோலாலம்பூர், நவ.5-
நாடு முழுவதும் உள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களில் அடுத்த ஆண்டு முதல் சிகரெட் விற்பனை நிறுத்தப்படும் என்று பிரேஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவகங்கள் நடத்துநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உணவகங்களில் சிகரெட் விற்பனை நிறுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு விடுத்து வரும் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த ஆண்டு முதல் இந்திய முஸ்லிம் உணவங்களில் சிகரெட் விற்னை செய்யப்படாது என்று அந்த சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹார் அலி தாயிப் தெரிவித்துள்ளார்.