புத்ராஜெயா, நவ.5-
தனது மூன்று பிள்ளைகள் தன்னிச்சையாக மதம் மாற்றப்பட்டது செல்லாது என்று அறிவித்து இருக்கும் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சவால் விடுத்துள்ள பெர்லிஸ் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியூவ் ஹோங் பூர்வாங்க ஆட்சேப மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஆட்சேப அப்பிடெவிட் மனு, இன்று காலையில் புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
லோ சியூவ் ஹோங் சார்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர் குணமலர் கோவிந்தராஜு, இதனை உறுதி செய்துள்ளார்.
அந்த மூன்று பிள்ளைகள் மதம்மாற்றப்பட்டது செல்லாது என்று அறிவித்து இருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி பெர்லிஸ் மாநில அரசாங்கம் விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே லோ சியூவ் ஹோங் சார்பில் இந்த ஆட்சேப ஆட்சேப மனுவை தாங்கள், தாக்கல் செய்துள்ளதாக குணமலர் விளக்கினார்.