புத்ராஜெயா, நவ.5-
நாட்டின் சட்டத்துறை தலைவர் அகமட் தெர்ரிருடின் முகமட் சலே, கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவிருக்கிறார். வரும் நவம்பர் 11 ஆம் தேதி, சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் அகமட் தெர்ரிருடின், நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
56 வயதான அகமட் தெர்ரிருடின், , ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சட்டத்துறை தலைவராக பதவியில் அமர்த்தப்பட்டார்.