வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்

கோலாலம்பூர், நவ.5-


சிறைச்சாலை கைதிகளை வீட்டுக்காவல் கைதிகளாக மாற்றும் சட்டத்திருத்த மசோதா, எல்லா நிலைகளிலும் நியாயமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து விவாதித்து வரும் அனைத்துத் தரப்பினரும் திறந்த மனதுடன் அதனை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா விவகாரம், சமூகத்தை பிளவுப்படுத்தும் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுவிக்க மட்டுமே வீட்டுக்காவல் திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறி வரும் சில தரப்பினருக்கு பதில் அளிக்கும் வகையில் சைபுன் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS