ஐந்து மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும்

பெட்டாலிங்ஜெயா, நவ.7-


இன்று சிலாங்கூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா கணித்துள்ளது. உலு சிலாங்கூர், பெட்டாலிங், கோம்பாக், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகியவையே அந்த 5 மாவட்டங்கள் ஆகும்.

இதே வானிலை கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், மலாக்கா, ஜோகூர், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான் சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது, ஆறு மணிநேரத்திற்கு மிகையாகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும் என்று மெட் மலேசியா குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS