போதைப்பொருள் பறிமுதல், காதலன் காதலி கைது

பாசீர் கூடாங், டிச.2-


வாந்தி, வயிற்றுக்போக்கு மருந்துப் பாக்கெட்டிற்குள் போதைப்பொருளை மிக சாதூரியமாக மறைத்து வைத்திருந்த காதலனும், காதலியும் பிடிபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர், பாசீர் கூடாங்கில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் போலீசார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் அந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்ததாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சுஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

43 வயது ஆடவரும், 27 வயது பெண்ணும் கைது செய்தது மூலம் மொத்தம் 63ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS