ரோஸ்மா மன்சோர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்

கோலாலம்பூர், டிச. 19-


சட்டவிரோதப் பண மாற்றம் உட்பட வருமான வரி வாரியத்திடம் தனது வருமானம் குறித்த விவரத்தை தெரிவிக்காதது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் 12 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு மேல்முறையீடு செய்யவிருக்கிறது.

தீர்ப்பு அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டு இருப்பதால் 14 நாட்களுக்குள் இந்த மேல்முறையீட்டு மனு சமர்ப்பிக்கப்படும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அகமட் அக்ராம் காரிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துரைத்த ரோஸ்மா மன்சோரின் வழக்கறிஞர் அமிர் ஹம்சா ஆர்ஷாட், நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்பது பிராசிகியூஷனின் உரிமையாகும் என்றார்.

WATCH OUR LATEST NEWS