டிச. 23-
GISB ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது மனைவி மேலும் 20 பேரமாகிய அனைவரும் திட்டமிட்ட குற்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் ந்நிதிபதி Lailatul Zuraida Harron இந்த முடிவை அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு எடுத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் Al-Arqam நிறுவனரின் மகனும் அடங்குவார். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சாதாரண சிறைக்கு மாற்ற விண்ணப்பம் செய்ய உள்ளதாகவும் அவர்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு பொதுமக்களிடையே அதிகம் பேசப்படுவதால், வழக்கை முறையாக நடத்த நீதிமன்ற உத்தரவு பெறவும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் ஆஜராகினர்.
கடந்த அக்டோபர் மாதம், ரவாங்கில் உள்ள திட்டமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களாக செயல்பட்டதாக நசிருதீன் மற்றும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.