SolaRIS எனப்படும் Skim Insentif Solar Untuk Rakyat திட்டம் 2025 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

டிச. 23-

விவசாய மின் பயனர்களும் சூரிய ஒளி மின் உற்பத்தி கருவிகளை நிறுவ NEM எனும் தூய எரிசக்தி மீட்டரிங் திட்டத்தில் இணையலாம் என்று PETRA என்ப்படும் எரிசக்தி, நீர் மாற்ற அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் முயற்சியிலும் ஒரு பகுதியாகும் என PETRA குறிப்பிட்டுள்ளது.

கட்டடங்களின் கூரைகளில் அதிக சூரிய ஒளி பேனல்களை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், NEM திட்ட வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே NEM திட்டத்தில் இணைந்துள்ள பயனர்கள் தங்கள் கருவிகளின் திறனை அதிகரித்துக் கொள்ளவும் புதிய விதிகளின் கீழ் செயல்படவும் அனுமதிக்கப்படுவார்கள்..

உள்நாட்டு பயனர்களுக்கு சூரிய ஒளி கருவி நிறுவலுக்கான 4,000 ரிங்கிட் வரை தள்ளுபடி வழங்கும் SolaRIS எனப்படும் Skim Insentif Solar Untuk Rakyat திட்டம் 2025 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுகளும் நீட்டிப்பும் 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என PETRA விளக்கியது.

2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சாரத்தில் 70 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய PETRA உறுதிபூண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS