16 பேர் இன்று பட்டர்வர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

டிச. 23-

Geng Pacific Siva’ கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் இன்று பட்டர்வர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 44 வயது M Subramaniam, 36 வயது G Tilagarajan, 39 வயது M Kesavan, 26 வயது N Sharvin,26 வயது T S Ligen Kumar, 24 வயது M Dineswaren 24=3 வயது P Kirubaagaran, 27 வயது G Meheshkumara, 28 வயது M Janagesh, 30 வயது R Logeswaaraaj, 44 வயது K Hendry, 37 வயது M Sivasangkaran, 29 வயது M Partiben, ழ்2 வயது S Arunan, 28 வயது S Denneswaran, 31 வயது V Alagis, ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள்.

நீதிபதி Nor Azah Kasran முன்னிலையில் குற்றச்சாட்டுகள் மலாய் மொழியிலும் தமிழ் மொழியிலும் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டதாக தலையசைத்தனர். இந்த வழக்கு SOSMA சட்டத்தின் கீழ் வருவதால், இது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் கடந்த ஜூன் 2016 முதல் நவம்பர் 2024 வரை குற்றங்களில் ஈடுபட்டதாகவும், மற்ற இருவர் பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2024 வரை குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றவியல் தடுப்புச் சட்டம் 130V(1) ன் கீழ் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS