ஜோகூர்பாரு,டிச. 23-
சீன நாட்டைச் சேர்ந்த இரண்டு உடல் ஊனமுற்றவர்களை பிச்சை எடுக்க வைத்து, மனித கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்த வேளையில் பிச்சை எடுத்த இரண்டு மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று இரவு 10.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட Ops Pintas Mega Tip சோதனை நடவடிக்கையின் மூலம் ஜோகூர்பாரு, ஸ்கூடாய், துன் அமினா, தாமான் உங்கு, ஜாலான் பெர்காசா ஐந்தில் 67 வயது உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்ததாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.
அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்த மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டதுடன், ஸ்கூடாய், தாமான் உங்கு துன் அமினா, ஜாலான் தெமங்கோங் மூன்றில் சீன நாட்டைச்சேர்ந்த உடல் ஊனமற்றவர்களான 39 வயது பெண்ணையும், 36 வயது ஓர் ஆடவரையும் போலீசார் மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.