பாலியல் பலாத்காரம் ஆறு நண்பர்கள் கைது

மூவார், டிச. 23-


பதினாறு வயது பெண்ணை ஒரு கும்பலாக சேர்ந்த பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆறு ஆடவர்கள் இன்று மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அந்த ஆறு ஆடவர்களில் இருவர், வரும் சனிக்கிழமை திருமண நிச்சயம் மற்றும் திருமணமேடை காணவிருந்தவர்கள் ஆவர்.

20 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அதிகாலையில் ஜோகூர் தங்காக்கில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றங்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்ட சிறார் சட்டத்தின் கீழ் அறுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS