கோலாலம்பூர்,டிச. 23-
வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாரிசான் நேஷனல், மற்றவர்களின் பலத்தை சார்ந்து இருக்கக்கூடாது என்று அதன் உறுப்புக்கட்சியான மசீச இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
மற்றவர்களின் ஒத்துழைப்பில் கிடைக்கக்கூடிய ஆதரவின் மூலம் வெற்றி பெற முடியும் என்று பாரிசான் நேஷனல் பகல் கனவு காணக்கூடாது என்று மசீச இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் நியூ சூ சியோங் தெரிவித்தார்.
பாரிசான் நேஷனல் தனது பொற்காலத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் அது, தனது பலத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.