17 வயது மாணவன் மீது 63 பாலியல் குற்றச்சாட்டுகள்

டிச. 23-

பாலியல் பலாத்காரம் புரிந்தததுடன் தன்வசம் ஆபாச வீடியோ படங்களை வைத்திருந்ததாக 17 வயது மாணவன் ஒருவன், ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.

அந்த மாணவனுக்கு எதிராக பாலியல் தொடர்புடைய 63 குற்றச்சசாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

7 மாணவர்களிடம் பாலியல் பலாத்காரம் மற்றும் ஆபாச சேட்டைப்புரிந்ததாக ஒன்று முதல் 62 குற்றச்சாட்டுகளும், தன் வசம் ஆபாசப்படம் வைத்திருந்ததாக மேலும் ஒரு குற்றச்சாட்டும் அந்த மாணவனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.

அந்த இடைநிலைப்பள்ளி மாணவன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜோகூர் குளுவாங்கிலும், தங்காக்கிலும்
13 முதல் 17 வயது வரையிலான மாணவர்களை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாணவன், தனக்கு எதிரான 63 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டான்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் மூன்று ஆண்டுகளுக்கு மலாக்கா, ஹென்றி கர்னி சீர்த்திருத்தப்பள்ளியில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிபுடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS