கோலாலம்பூர், டிச. 24-
இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மருந்து, மாத்திரைகள் கலக்கப்படுவதாக கூறப்படுவதை மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரேஸ்மா வன்மையாக மறுத்துள்ளது.
இது, இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக வேண்டுமென்ற கட்டவிழ்க்கப்பட்டுள்ள ஓர் அவதூறாகும் என்று அந்த சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹார் அலி தாயிப் கான் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மருந்து, மாத்திரைகள் கலக்கப்படுகின்றன எனும் வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளஙகளில் வைரலாகி வருவது தொடர்பில் டத்தோ ஜவஹார் அலி கருத்துத்துள்ளார்.
சில பொறுப்பற்ற தரப்பினர் இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உண்மைக்கு புறம்பான செய்தியை வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.