சிப்பாங், டிச. 26-
இம்மாதம் முற்பகுதியில் காய்கறித் தோட்டத்தில் வங்காளதேச ஆடவரை கொலை செய்ததாக இரு ரோஹிங்யா அகதிகள், சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
22 வயது ஜமால் ஹுசேன் மற்றும் 17 வயது இளைஞர் ஒருவர் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 4 மணிளளவில் ஜாலான் பந்திங், தெலுக் பங்லீமா காராங்கில் அவ்விரு இளைஞர்களும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.