அரசியல் முதலைகள் தப்பிப்பதாக அரசு சாரா இயக்கம் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், டிச. 26-


அண்மைய காலமாக சில அரசியல் முதலைகள், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதாக கூறி அரசு சாரா இயக்கம் ஒன்று தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

போதுமான அடிப்படை முகாந்திரங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்த அரசியல் முதலைகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்டு வருவதாக மலேசிய மக்கள் ஆலோசனை பேரணி என்ற ஹராம் அமைப்பு கூறுகிறது.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அரசியல் முதலைகள் தப்பித்து வருவது, இதற்கு முன்பு முழக்கமிடப்பட்ட சீர்திருத்த சுலோகத்தின் உன்னத ப் போராட்டத்தை கேள்விக்குறியாக்கி வருவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அடான் நோர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS