அன்வாருக்கு சிகிக்சை அளித்த மருத்துவர் காலமானார்

கோலாலம்பூர், டிச. 27-


கடந்த 1998 ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது, அவரின் கண் பகுதி தாக்கப்பட்டதில் அவரின் கண்ணுக்கு சிகிச்சை அளித்த கண் மருத்துவத்ர டாக்டர் அமாட் ஷூக்ரி முகமட் நேற்று காலமானார்.

இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தமது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அன்வார் போலீஸ் காவலில் இருந்த போது அவரே சொந்தமாக தம்மை துன்புறுத்திக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த விசாரணையின் போது அன்வாரின் கண் பாதிப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவவர்களில் முக்கியமானவரான சுக்ரியும் சாட்சியம் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS