பினாங்கு, டிச. 27-
சிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகமான ஆபாச வீடியோப் படங்களை மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து வைத்திருந்த குற்றத்திற்காக பொறியிலாளர் ஒருவருக்கு பினாங்கு, பாலிக் பூலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
45 வயது யோக் லியான் சான் என்ற அந்த நபர், நாடு தழுவிய நிலையில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் சியா ஹுவாய் திங் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஆபாசப்படங்கள் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் பினாங்கு, பாயான் லெப்பாஸ், தாமான் சுங்கை ஆராவில் உள்ள தனது வீட்டில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.