வழக்கின் மறு விசாரணை எதிர்வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும்

டிச. 27-

மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகமான UPNM இன் இராணுவ பயிற்சி மையத்தின் பயிற்சி அதிகாரி ஒருவர், இளைய மாணவரை நீராவி இஸ்திரி பெட்டியால் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கின் மறு விசாரணை எதிர்வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி Egusra Ali அறிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 22 வயது Amirul Iskandar Norhanizan அக்டோபர் 22 ஆம் தேதி இரவு UPNM வளாகத்தில் 20 வயது Muhammad Salman Mohd Saiful Surash என்ற மாணவரை நீராவி இஸ்திரி பெட்டியைப் பயன்படுத்தி காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், இதன்படி அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் 20 ஆயிரம் வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும், வழக்குத் தரப்பு சாட்சிகளை அவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தங்கும் அறை நண்பர்களும் UPNM அதிகாரிகளும் சாட்சிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS