வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்

டிச. 27-

முகநூல் விளம்பரம் ஒன்றின் மூலம் அறிமுகமான பங்குச் சந்தை முதலீட்டு மோசடியில் சிக்கி, வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார் என Johor Bahru Selatan மாவட்டக் காவல் துறை தலைவர் Asisten Komisioner Raub Selamat தெரிவித்தார்.
அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண் தன்னை முதலீட்டு ஆலோசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.


கடந்த நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை, பாதிக்கப்பட்டவர் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 14 பரிவர்த்தனைகளில் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்தியுள்ளார். லாபத்தை திரும்ப எடுக்க வேண்டுமென்றால் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல் கேட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார் என Raub Selamat மேலும் சொன்னார்.


ஆரம்ப கட்ட விசாரணையில், மோசடியில் தொடர்புடைய மூன்று வங்கிக் கணக்குகளில் இரண்டு, ஏற்கனவே மோசடி புகார்களைக் கொண்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS