மலாக்கா, டிச. 27-
மலாக்கா, பத்து பெராண்டாமில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத்துறையினர் நேற்று இரவு நடத்திய திடீர் சோதனையில் முறையான பயணப்பத்திரம் ம் இல்லாத ஒரு சமையல்காரரும், 13 அந்நிய நாட்டுப்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த 20 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்தப் பெண்கள், வாடிக்கையாளர்களுக்கு உபசரணைப் பெண்களாக பணியாற்றி வந்தனர் என்பது தெரியவந்ததாக மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அனிர்வான் பாவ்சி முகமட் அயினி தெரிவித்தார்.
ஓரிட மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.