கோலாலம்பூர், டிச.28-
நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் லோரிகள் சம்பந்தப்பட்ட 3,500 சாலை விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.
விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இதேகாலக்கட்டத்தில் 473 பேர் கடுங்காயங்களுக்கும், 1,076 பேர் சொற்ப காயங்களுக்கும் ஆளாகிவிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குரத்து குற்றப்பிரிவின் அமலாக்க இயக்குநர் டத்தோ யுஸ்ரி ஹசான் பஸிர் தெரிவித்தார்.
மேலும் இவ்வாண்டில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வரை சாலை விபத்துக்களில் 260 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.