துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இரண்டு நபர்கள் கைது

பாசீர்மாஸ், டிச. 28-


தங்கள் வசம் துப்பாக்கிகளையும் போதைப்பொருளையும் வைத்திருந்ததாக நம்பப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

19 மற்றும் 34 வயதுடைய அந்த இரு நபர்களும் நேற்று கிளந்தான், பாசீர் மாஸ், கம்போங் டேகோங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இரு நபர்களை வளைத்துப் பிடித்தது மூலம் ரைபில் ரக துப்பாக்கி, பம் கன் துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 76 கிராம் போதைப்பொருள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் நிலையத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS