புதுடில்லி, டிச. 28-
இந்திய முன்னாள் பிரதமரும், இந்திய பொருளாதார மேதையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் நல்லுடல் முழு அரசு மரியாதையுடன் யமுனா ஆற்றின் கரையில் இன்று தகனம் செய்யப்பட்டது.
மன்மோகன் சிங்கின் நல்லுடல், டெல்லியில் அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்பின்னர், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து, மன்மோகன் சிங்கின் நல்லடக்க சடங்கு இறுதி ஊர்வலம் துவங்கி, யமுனா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகாம்போத் காட் பகுதியை அடைந்தது.
அங்கு முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் நேற்று தமது 92 ஆவது வயதில் காலமான முன்னாள் பிரதமருக்கு, இறுதி அஞ்சலி செலுத்தியவர்களில் அடங்குவர்.