ஜோகூர்பாரு, டிச. 28-
ஜோகூர்பாரு, ஸ்கூடாய், தாமான் நேசாவில் வீடு புகுந்து நிகழ்த்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பின்னிரவு 12.18 மணியளவில் பெறபட்ட போலீஸ் புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்ததில் 32 வயது நபர் பிடிபட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்விர் சிங் தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு மாது, விலை உயர்ந்த ஆபரணங்களை இழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பல்விர் சிங் குறிப்பிட்டார்.