மெர்சிங், டிச. 28-
ஜோகூர், மெர்சிங், பெல்டா நித்தார்1, ஜாலான் மெர்சிங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் மூன்று வயது சிறுவன் உட்பட எண்மர் காயமுற்றனர்.
இந்த விபத்தில் ஒரு டிரெய்லர் லோரியும், டோயேட்டா கால்டினா ரக வாகனமும் சம்பந்தப்பட்டு இருந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெர்சிங் நிலையத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, இடிபாடுகளிலிருந்து காயமுற்றவர்களை மீட்டதாக அதன் கமாண்டர் சம்சூரி ஷபாய் தெரிவித்தார்.