டிச. 29-
மலேசிய நிறுவன ஆணையமான SSM, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சட்டவிரோத முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 19 நிறுவனங்களை விசாரித்து வருகிறது. மோசடி முதலீட்டுத் திட்டங்களிலும் பங்கு வெளியீடுகள் தொடர்பிலும் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், பிற அமலாக்க நிறுவனங்களின் தகவல்களின் படியும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என ஆணையம் தகவல் அளித்துள்ளது.
விசாரணையின் ரகசியத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்தும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
2017 முதல் ஜூன் 2024 வரை, மொத்தம் 197 நிறுவனங்களை சட்டவிரோத முதலீட்டுத் திட்டங்களுக்காக விசாரிக்கப்பட்டுள்ளன. COVID-19 தொற்றுநோய் பரவிய 2021 , 2022 ஆம் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன.