டிச. 29-
நேற்று ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 33 வயது பெண்ணை தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர். இந்த சம்பவம் நேற்று காலை 11.59 மணியளவில் நிகழ்ந்துள்ளது என தீயணைப்பு – மீட்புப் படை அதிகாரி Rosmawi Ismail தெரிவித்தார்.
புக்கிட் ஜாலில் தீயணைப்பு – மீட்பு படை நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் சம்பவ இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்த உதவினர்.
பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் சமாதானப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் வீட்டின் பின்புறத்திலிருந்து குதிக்க முயன்றதால், தீயணைப்பு வீரர்கள் அவ்வீட்டின் முன்வாசல் பூட்டை வெட்ட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.