டிச. 29-
சிரம்பான் Tuanku Ja’afar, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தாலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வருகை காரணமாகவும் , சில நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என எகிரி செம்பிலான் மாநில சுகாதார இயக்குநர் Datuk Dr Harlina Abdul Rashid தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 26ஆம் நாளன்று இந்த பிரச்சினையை அம்மருத்துவமனை சந்தித்தது. மாநில சுகாதாரத் துறையும் மருத்துவமனை நிர்வாகமும் இந்த தாமதத்தை ஒப்புக்கொண்டன.
தீ விபத்து மருத்துவமனையின் செயல்பாட்டுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. அவசர சிகிச்சைப் பிரிவில் அதிக நோயாளிகள் இருந்ததும், வார்டில் காலியான படுக்கைகள் இல்லாததும் தாமதத்திற்கு முக்கிய காரணங்களாகும்.
நெரிசலைக் குறைக்க, 6 படுக்கைகள் கொண்ட discharge lounge’ ஐயும் 12 படுக்கைகள் கொண்ட holding bay’ஐயும் தற்காலிக வார்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. தாமதத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த வழிமுறை கையாளப்பட்டது என Dr Harlina குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு Shiftஇன் சூழ்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால், பிற மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள். என்றார். மேலும், லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள் அருகிலுள்ள சுகாதார கிளினிக்குகளில் சிகிச்சை பெற Dr Harlina அறிவுறுத்தினார்.