கிறிஸ்துமஸ் கொண்டாட்ட சர்ச்சை: ஙா கோர் மிங் மீது PAS கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது

டிச. 29-

அமைச்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக PAS கட்சியை அமைச்சர் Nga Kor Ming விமர்சித்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக PAS கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. PAS கட்சியை “தவறான பாதையில் செல்லும் கட்சி” எனவும் “தவறான போதனைகளைப் பரப்புகிறது” எனவும் கடுமையான வார்த்தைகளால் Nga Kor Ming விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Nga Kor Mingஇன் விமர்சனங்கள் மாமன்னரையும் ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு எதிராக சவால் விடுவதாகவும், தேசிய ஃபத்வா மன்றத்தின் அதிகார வரம்பை மீறுவதாகவும் PAS குற்றம் சாட்டியுள்ளது. முஸ்லிம் அல்லாத ஒருவர் இஸ்லாமிய மத விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் PAS கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan வலியுறுத்தியுள்ளார்.

PAS இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Hanif எழுப்பிய கேள்விகள் நியாயமானவை என்றும், அவை கவனமாக கையாளப்பட வேண்டும் என்றும் Takiyuddin குறிப்பிட்டார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான PAS இன் வாழ்த்துகளானது பாசாங்குத்தனம் அல்ல என்றும், அது பன்முகத்தன்மையின் அடையாளமாக பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம் என்றும் அவர் கூறினார்.

வீட்டு வசதி, ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய ஊழியர்களும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கிறிஸ்தவ பூமிபுத்ராக்கள் என்றும் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

WATCH OUR LATEST NEWS