ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது

டிச. 29-

கிளந்தான் மாநிலத்தில் உள்ள Kampung Nganga என்ற இடத்தில் இன்று காலை முதல் பெய்த கனமழையின் காரணமாக ஒரு வீட்டின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தீயணைப்பு – மீட்புப் படையினருக்கு பிற்பகல் 1.40 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், நிலச்சரிவு வீட்டின் முன்பகுதி, வேலி, கார் நிறுத்தும் இடத்தை சேதப்படுத்தியதை கண்டறிந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் உயரம் 12 மீட்டருக்கும் அதிகமாகவும், அகலம் கிட்டத்தட்ட 7 மீட்டராகவும் உள்ளது. முக்கியமாக, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் நகர்வு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS