டிச. 29-
Kedah Darul Aman (KDA) FC கால்பந்து விளையாட்டாளர்கள் ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களில் ஒரு விளையாட்டாளரான Muhammad Irfan Zakaria இன் மனைவி என நம்பப்படும் மாது ஒருவர் இந்தத் தகவலை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். கிளப்பில் நிதி இல்லை என்றால், கிளப்பை மூடிவிடலாம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது புதிய பிரச்சனை அல்ல. இதற்கு முன்பும் விளையாட்டாளர்கள் ஊதிய பிரச்சனை காரணமாக பயிற்சிகளையும் போட்டிகளையும் புறக்கணித்துள்ளனர். இந்த நிதி நெருக்கடி அணிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நிதிப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், KDA FC சூப்பர் லீக் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. சமீபத்தில் PENANG FC ஐ வென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மேலும் MFL Challenge கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அணி வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளப் நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று ரசிகர்களும் வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.