டிச. 29-
தனது கட்சி உறுப்பினர்களின் தவறான செயல்களை நியாயப்படுத்துவதற்காக PAS கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் , மத வாதங்களை பயன்படுத்துவது மிகவும் பொறுப்பற்ற செயல் என்று உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail கடுமையாக விமர்சித்துள்ளார். இது இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று அவர் கூறினார்.
Dr Siti Mastura என்ற நாடாளுமன்ற உறுப்பினர், DAP தலைவர்களுக்கு இழப்பீடு செலுத்த நிதி திரட்டுவதற்காக PAS மேற்கொண்ட முயற்சிகளை ஹாடி நியாயப்படுத்தியதை Saifuddin கண்டித்தார். தவறுகளைச் செய்த உறுப்பினர்களுக்கு பொறுப்பேற்க இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது என்ற ஹாடியின் வாதத்தை அவர் மறுத்தார்.
அவதூறு வழக்கில் தோல்வியடைந்த Dr Siti Masturaவுக்கு உதவுவதற்காக PAS கட்சி நன்கொடை திரட்டியது, இஸ்லாம் அவதூறை ஆதரிப்பது போன்ற ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று Saifuddin குறிப்பிட்டார். மேலும், இது asobiyah எனப்படும் தவறுகளை செய்தவர்களை ஆதரிக்கும் செயலாகவும் கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
விடுதலைக்குப் பிறகு PAS கட்சிபல்வேறு துன்பங்களை சந்தித்து வருவதாக ஹாடி கூறிய கருத்துக்கு பதிலளித்த Saifuddin, மதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை விமர்சித்தார். மேலும், முஸ்லிம்கள் மதத்தை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.