நகைகளை கொள்ளையிட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு

டிச. 30-

ஒரு கும்பலாக சேர்ந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக வலது கரம் நலிவுற்ற நபர் ஒருவர் உட்பட இருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு OKU- வான 43 வயது Mah Cheow Chuen மற்றும் 42 வயது Muhammad Zaim Goj Abdullah ஆகிய இருவர், நீதிபதி Nurzafirah Mohamed Ali முன்னிலையில் நிறுத்தப்பட்டு .குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இரவு 7.35 மணியளவில் பினாங்கு, பகான் ஆஜம், Pusat Perniagaan Oren என்ற வர்த்தகத் தளத்தில் ஒரு கும்பலுடன் சேர்ந்து 27 வயது நபரை மடக்கி, கொள்ளையிட்டதாக அந்த இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

WATCH OUR LATEST NEWS