டிச. 30-
179 பேர் பலியான தென்கொரிய விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Jejur Air விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கு பறவைகள் மோதியதான் காரணமா? என்ற கேள்வி எழுந்த போதிலும் உண்மையான காரணத்தை விமான விபத்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்று காலை, தென்கொரியா, Muan அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தரையிறங்கம் கியர் இயங்காததால் நேர்ந்த இந்த விபத்தில் 179 பேர் மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பறவைகள் மோதி, தரையிறங்கம் கியரை செயலிழக்க செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளதால் விபத்திற்கான உண்மையான காரணங்ளை கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
181 பயணம் செய்த அந்த விமானத்தில் இருவர் உயிர்த் தப்பியுள்ளனர். நேற்று காலை 9 மணியளவில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து புறப்பட்ட Jejur Air விமானம் விபத்துக்குள்ளானது, தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான பேரிடர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.