டிச. 30-
உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு வரும் ஜனவரி 4,5 ஆகிய இரு தேதிகளில் பினாங்கு, Dewan Sri Penang அரங்கில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
மாநாட்டின் தொடக்கவிழா ஜனவரி 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்ககிறது. மாநாட்டை பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்கவிருக்கிறார்.
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
மாநாட்டின் இரண்டாவது நாளான ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிற்றக்கிழமை பன்னாட்டு குறு,சிறு,நடுத்ததர தொழில் கூட்டமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. சிறப்பு அழைப்பாளர்களாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கினனர்.