டிச. 30-
பிரமுகர் ஒருவரின் மகனை அடித்துக் காயப்படுத்தியதாக டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபர் ஒருவர், அவரின் மகள், அவரின் மருமகன் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் என ஐவர் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்
டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட நபரான 62 வயது முகமட் ஃபாஸில் ஷாபி, அவரின் 33 வயது மகள் நூர் அமலினா, 32 வயது மருமகன் அம்ரான் அஸ்மி, நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களான 28 வயது அஸ்ருல் ஷாபிக் ரோஸ்மான், 37 வயது அஸியான் அப்துல் ரஹிம் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் பிரமுகர் ஒருவரின் மகனான 30 வயது முகமட் நூர் ஹக்கிம் என்பவரை அடித்து காயப்படுத்தியாக டத்தோஸ்ரீ உட்பட ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.