டிச. 30-
சுங்கை பூலோவில் உள்ள Taman Seri Alamஇல் அணை உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் தன்னார்வத் தொண்டர் குழு களமிறக்கப்பட்டுள்ளது என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ராமனன் ராமகிருஷ்ணன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்
குடியிருப்பாளர்களின் நலனைப் பாதுகாக்க தனது குழு எப்போதும் செயல்படும் என்று உறுதி அளித்துள்ளார் ரமணன். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை, காவல்துறை, அரசு நிறுவனங்கௐ ஆகியவற்றுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர்களின் துரித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி கிடைத்ததாகத் தமது பாராட்டையும் பதிவு செய்தார்.
டேங்க் குளம் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணப் பணிகளும், எதிர்கால தடுப்பு நடவடிக்கைகளும் குறித்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.