டிச. 30-
நாடு முழுவதும் PUSPAKOM இல் Op Mengejut PUSPAKOM திடீர் சோதனஈயை நடத்தியது சாலைப் போக்குவரத்துத் துறை JPJ. இதில் பல கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சக்கரங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
JPJ இன் மூத்த அமலாக்க இயக்குநர் Muhammad Kifli Ma Hassan உறிப்பிடுகயில், PUSPAKOM இல் உள்ள வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறினார். Wangsa Majuவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல லாரிகள் பாதுகாப்பற்ற சாக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீதும் PUSPAKOM ஊழியர்கள் மீதும் JPJ விசாரணை நடத்த உள்ளது. மேலும், PUSPAKOM இன் SOP ஐ மேம்படுத்துவதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானது. இந்த சோதனையின் மூலம், வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய JPJ நடவடிக்கை எடுத்துள்ளது.